யாழில் 25 பவுண் நகையை வாங்கி ஏமாற்றிய நண்பி – குடும்பப் பெண்ணின் தவறான முடிவு
-யாழ் நிருபர்-
பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவரான ரொபேட் ராஜ்குமார் ஆன் சுகாசினி (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் சினேகிதி ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு செலவழிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார். இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக குறித்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார். அவர் அந்த நகையை வழங்க மறுக்க மனவிரக்தியில் நேற்று அதிகாலை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இளவாலை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.