இலங்கை தமிழரசுக்கட்சியின் அழைப்பிற்கு ஜீவன் ஆதரவு!

இலங்கை இராணுவ வீரர்களால் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 07 ஆம் திகதி இராணுவத்தினரால் தாக்கப்பட்ட பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படும், 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜைத் தேடும் பணி தொடங்கப்பட்டதாகவும், பின்னர் ஆகஸ்ட் 09 ஆம் திகதி, ஒட்டுசுட்டானில் உள்ள முத்தையன்கட்டு குளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஜீவன் தொண்டமான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நீதியைக் கோரும் மற்றும் இராணுவத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு நான் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

உள்நாட்டுப் போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும், இலங்கையில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இன்னும் நடப்பது வருத்தமளிக்கிறது என்று ஜீவன் தொண்டமான் மேலும் கூறினார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அழைப்பிற்கு ஜீவன் ஆதரவு!
இலங்கை தமிழரசுக்கட்சியின் அழைப்பிற்கு ஜீவன் ஆதரவு!