மட்டக்களப்பிலும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் – வீடியோ இணைப்பு-

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பிலும் இன்று சனிக்கிழமை காந்தி பூங்கா முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்த ப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒரே நேரத்தில் எட்டு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு பதாதையினை ஏந்தியவாறு சம நீதி கோரிய கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கையொப்பத்தினையும் பதிவுசெய்தனர்.