கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் – 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நீதிமன்றத்திற்கு
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கு அமைய, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினராவர்.
எலும்புக்கூடுகளாகத் தோண்டி எடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், வெடிப்புக் காயங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக, ஆரம்பக்கட்ட பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.