நாடு முழுவதும் புதிதாக சுபோஷா விற்பனை நிலையங்கள்
எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று வெள்ளிக்கிழமை கந்தானையில் உள்ள திரிபோஷா நிறுவனத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
திரிபோஷா நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உற்பத்தியைத் தொடர எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.