நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை : விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது
நெல்லுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உத்தரவாத விலை விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நெல்லுக்கென தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்