கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உத்துவன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.