ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விமான கொள்முதல், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டத்தையடுத்து அவரை, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது