திருகோணமலை மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி.எம் ஹேமந்த குமார நெறியாழ்கையின் கீழ் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும் வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் கேமசந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், ரொசான் அக்மீமன மற்றும் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் மீன் பிடி தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன எதிர் காலத்தில் மீனவ சமூகம் பிரச்சினைகள் இன்றி தங்களது தொழில்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் சட்ட விரோத மீன் பிடி,திருகோணமலை பொது மீன் சந்தை , கொட்பே மீன் பிடி துறை முகம் போன்றவற்றில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் மேலும் கலந்துரையாடப்பட்டன.