முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னால் தீ விபத்து : நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னால் தீ விபத்து : நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்பகுதியில் உள்ள உணவகமொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், குறித்த உணவகமும், உணவகத்தின் அருகே இருந்த வர்த்தக நிலையமும் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன், அருகே இருந்த மேலும் சில வர்த்தக நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு உடனடியாக நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனஞ் செலுத்தியதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உடன் கலந்துரையாடியதுடன், நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்று இல்லாமையினாலேயே கூடுதல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்துவது தொடர்பாக தம்மால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் இதன் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News