திருகோணமலை மீனவர்கள் மீது தாக்குதல் : வாழைச்சேனையை சேர்ந்த மூவர் கைது!

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மீனவர்கள் மீது தாக்குதல் : வாழைச்சேனையை சேர்ந்த மூவர் கைது!

திருகோணமலை திருக்கடலூர் மீனவர்களை, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில், வாழைச்சேனை பகுதியை சேர்ந்த மூவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் துறை முக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, 32,34,38 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர்களுக்கு நீதி கோரி திருகோணமலையில் வீதி மறியல் போராட்டம் ஒன்றை திருக்கடலூர் மீனவர்கள் நேற்று முன்னெடுத்திர்ந்தனர்.

இச்சம்பவத்தில் கைதான மூன்று சந்தேக நபர்களையும், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை துறைமுக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை துறைமுக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News