சிறுபோக அறுவடை ஆரம்பம்: போதிய அளவிலான விளைச்சலை பெற முடியாத நிலையில்

-கிளிநொச்சி நிருபர்-

சிறுபோக அறுவடை ஆரம்பம்: போதிய அளவிலான விளைச்சலை பெற முடியாத நிலையில்

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு நீர்ப்பாசன குளத்தின் கீழ்  175 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகின்றது.

இம்முறையும் போதிய அளவிலான விளைச்சலை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் பல தடவைகள் கிருமி நாசினி விசிறப்பட்டிருந்த போதிலும் உரிய விளைச்சலை பெற முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் அரசாங்கத்தினால் உரிய காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலை விவசாயிகளுக்கு ஏற்ற வகையில் உரிய காலத்தில் நிர்ணயிக்கப்படுவதில்லை இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய முடியாத நிலையில் இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கமாவது விவசாயிகளின் நலனை கரத்தில் கொண்டு உரிய நேரத்தில் நெல்லுக்கான விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ச்சியாக விவசாய செய்கையை மேற்கொள்வதற்கு  ஆதரவு வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News