
கொழும்பு, களுத்துறை, மொரட்டுவ பகுதிகளுக்கான மின்விநியோகம் வழமைக்கு
கொழும்பு, களுத்துறை, மொரட்டுவ பகுதிகளுக்கான மின்விநியோகம் வழமைக்கு
கொழும்பு, களுத்துறை, மொரட்டுவ உள்ளிட்ட சில பகுதிகளுக்கான மின்விநியோகம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பியகம மற்றும் பன்னிப்பிட்டிய பிரதான மின்மாற்றி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கொழும்பு, களுத்துறை, மொரட்டுவ உள்ளிட்ட பகுதிகளுக்கான மின்விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சில பகுதிகளுக்கான மின்விநியோகம் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தடைப்பட்டுள்ள சில பகுதிகளுக்கான மின்விநியோகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.