ரயில் விபத்தை தடுத்த நபரை பாராட்டினார் ஆசிய ஒலி, ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

ரயில் விபத்தை தடுத்த நபரை பாராட்டினார் ஆசிய ஒலி, ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

ரயில் விபத்தைத் தடுத்து பெரும் பேரழிவைத் தவிர்த்த சமந்த என்ற நபரை ஆசிய ஒலி, ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெய்னோ சில்வா பாராட்டியுள்ளார்.

ஆசிய ஒலி, ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை வருகைதந்த சமந்தவை சந்தித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இதேவேளை அவரது இந்த துணிச்சலான செயலை ஊக்குவித்தும் பாராட்டியும் பணப்பரிசு ஒன்றை ஆசிய ஒலி, ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெய்னோ சில்வா வழங்கினார்.

பாணந்துறை மற்றும் மொரட்டுவை ரயில் நிலையங்களுக்கு இடையில்  ஏற்படவிருந்த ரயில் விபத்தை, பிரதேசவாசியான சமந்த சாதுரியமாக செயற்பட்டு தவிர்த்திருந்தார்.

இந்த செயற்பாட்டை வரவேற்கும் முகமாக ஆசிய ஒலி, ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெய்னோ சில்வா இன்றைய தினம் குறித்த நபரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News