பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு

-மூதூர் நிருபர்-

பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை – தோப்பூர் அல்தாஜ் மகாவித்தியாலயத்தில் அதிபர் முகம்மது முகைதீன் நௌபீக் ஆலோசனையின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை பிரதி அதிபர் ஐ.ஹாபீஸ் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மாணவர்கள் சுற்றாடல் தொடர்பான பதாதைகளை ஏந்தியவாறு பாடசாலை வளாகத்தின் முன்னால் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவர்கள் அன்பளிப்புச் செய்த பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24