பீதி அடைய வேண்டாம் “பிகினிகள்” அனுமதிக்கப்படுகின்றன

பொத்துவில் அறுகம்பை கடற்கரை பகுதிகளில் உள்ளூர்வாசிகளும் , வெளிநாட்டினரும் பொது இடங்களில் பிகினி அணிவதைத் தடை செய்யும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லலை என பொலிசார் மறுத்துள்ளனர்.

‘அறுகம்பை உள்ளூர் சமூக மக்கள்’ என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு பதிவில், அந்தப் பகுதியில் பிகினி உடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“அறுகம்பை உங்களை வரவேற்கின்றது“ உங்களை இங்கு சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் வருகையை உண்மையிலேயே மதிக்கிறோம். எங்கள் உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்கும் வகையில், பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மரபுகள் மீதான உங்கள் மரியாதை எங்கள் சமூகத்திற்கு மிகவும் முக்கியம். உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும் அழகான அறுகம் கடற்கரையில் உங்கள் நேரத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்!” என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இத்தகைய தடை எதுவும் இல்லை இந்தப் பதிவு ஒரு தனிநபரால் பகிரப்பட்டதாகவும், விசாரணை தொடங்கப்பட்டதாகவும் பொத்துவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பீதி அடைய வேண்டாம் “பிகினிகள்” அனுமதிக்கப்படுகின்றன
பீதி அடைய வேண்டாம் “பிகினிகள்” அனுமதிக்கப்படுகின்றன