சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

மே மாதத்தின் முதல் 21 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த மாதத்தின் முதல் 21 நாட்களில் 91,785 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 988,669 ஆக அதிகரித்துள்ளது.