கதிர்காமத்துக்கான புனித யாத்திரை : காட்டு வழிப்பாதை திறக்கும் திகதி அறிவிப்பு!

கதிர்காமத்துக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்காக குமண தேசிய பூங்கா ஊடான காட்டு வழிப்பாதை அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பயணிக்கும் யாத்திரிகர்களுக்காகவே குறித்த காட்டு வழிப்பாதை திறக்கப்படவுள்ளது.

கதிர்காம வருடாந்த உற்சவம் அடுத்த மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தநிலையிலேயே, யாத்திரிகர்களுக்காக குமண தேசிய பூங்கா ஊடான காட்டு வழிப்பாதை திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.