யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றது

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றது.

யாழ்பாண மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளதுடன் 292 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை வெள்ளிக்கிழமை அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறுவதுடன், அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக 28.04.2025 மற்றும் 29.04.2025 ஆகிய திகதிகளிலும் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்