16 வயது மாணவன் தலைக்கவசத்தால் தாக்கி கொலை: 11 பேர் கைது

குருணாகல் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நண்பர்கள் தலைக்கவசத்தால் தாக்கியதில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ஹெவன்பொல, செக்கரலியா தோட்டம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

இதன்போது அரபோல கந்த மற்றும் அம்பகோட்டே பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வெலிகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெவன்பொல பகுதியில் ஏப்ரல் 16 ஆம் திகதி மாணவர்கள் குழு மற்றொரு மாணவனை அடித்து, உதைத்து, தலைக்கவசங்களைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிர் இழந்துள்ளார்.

சடலம் குருநாகல் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்