டேன் பிரியசாத் கொலை: மூவர் கைது

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்