ரயில் பாதுகாப்பு கடவை ஊழியர் உறக்கத்தில் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு
பெரகும்புர – அம்பேவளை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:15 மணியளவில் ரயில் கடவையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பதுளை தியத்தலாவை பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் குறித்த பகுதி ரயில் கடவையின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ள நிலையில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் குறித்த ரயிலில் ஏற்றப்பட்டு அம்பெவெல ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.