
இன்று இரவு இடியுடன் கூடிய மழை!
நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழைபெய்யக் கூடும்.
வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.