பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சார்லஸ் மன்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து நேற்று மற்றும் இன்றைய தினம் அவரது பொது நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்