
மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தாய் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண், மகேந்திரா ரக வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
31ஆம் கட்டைஇ முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இவர் மகளை கல்வி நிலையத்திற்கு, நடந்து கூட்டிச் சென்றுகொண்டிருந்தார், இதன்போது பின்னால் வந்த மகேந்திரா வாகனம் இவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்தார்.
பின்னர் சாரதி முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண், முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
