கடந்த மாதத்தில் தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி

கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாகத் தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், 2.04 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையுடன் ஒப்பிடுகையில் 1.9 மில்லியன் கிலோகிராம் குறைவாகும் எனத் தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.