
மட்டக்களப்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கல்களை புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும் விவசாய திணைக்களத்திடம் கோரி விவசாயிகள் இன்று செவ்வாய்க்கிழமை வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச விவசாயிகள் அமைப்புக்கள் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 9 மணிக்கு வவுணதீவு பிரதேச செயலக்தின் முன்னாள் விவசாயிகள் ஒன்று திரண்டனர்.
இதனையடுத்து மாகாண நீர்பாசன திணைக்களமே வெளிப்படையாக வேலைகளை செய், கண்டியனபாறு திட்டத்தை iகைவிடப்பட்டதா? அரசாங்கத்தின் நிதியினை பசளை மானியம் நஷ்டஈடு என விரயம் செய்யவா அரச அதிகாரிகள்? ஏன் எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லவேண்டும், மாகாண நீர்ப்பாசன திணைக்களமே? ஊப்பாற்றில் வீணாக செல்லும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டங்களை தீட்டு.
1600 ஏக்கர் விவசாய காணி 4000 ஏக்கர் மேட்டுக்காணிகளுக்கு நீர் வழங்குவதற்கு ஏன் தயக்கம், விவசாயிகளை பிரித்தாழும் தந்திரம் வேண்டும், இரசாங்க அதிபரின் அராஜகம் ஒழிக? , பிரதேச அபிவிருத்தியின் நிலை என்ன பிரதேச செயலாளரே? மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதே அதிகாரிகளின் கடமையா? விவசாயிகளே விழித் தொழுங்கள் போன்ற வாசகங்கள் எந்தியவாறு சுமார் ஒருமணித்தியாலம் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.