
ஆறாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், இந்த வருடம் 6 ஆம் தரத்துக்கு மாணவர்களைப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
எனினும், இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகள் கிடைக்காத மற்றும் ஏனைய நியாயமான காரணங்களுக்காக தங்களுக்கான பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள் எதிர்காலத்தில் இணையவழி ஊடாக மாத்திரம் மேன்முறையீடு செய்ய முடியும்.
மேலும் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மேன்முறையீடுகளும் இணையவழி ஊடாக மட்டுமே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.