மகளிர்தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்பில் இடம்பெற்ற மாபெரும்வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-

சர்வதேச மகளிர்தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்பில் இடம்பெற்ற மாபெரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்குபிரதேச செயலக அணியினரும், வந்தாறுமூலைமத்திய மகாவித்தியாலய அணியினரும்சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

“நிலையான எதிர்காலத்தைஉருவாக்குவதற்காக – அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்”  எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தொனிப் பொருளில் அமைந்த இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தின் ஏற்பாட்டில் வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதிஅனுசரணையில் இளைஞர்அபிவிருத்தி அகம்நிறுவனத்தின் அமுலாக்க ஆதரவுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இப்போட்டி மாவட்டசெயலக, பிரதேசசெயலக, பாடசாலை வலைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களுக்கிடையே மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் இடம் பெற்று வந்தது.

போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டினாஜுலேகா, மேலதிக மாவட்டச் செயலாளர் சுதர்சனி சிறீகாந்த், காணிக்குப் பொறுப்பான மாவட்டச் செயலாளர் நவரூபரஞ்சினி, மாவட்ட செயலக உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என். தனஞ்ஜெயன், கிழக்குப் பல்கலைக்கழகசுவாமி விபுலானந்தாஅழகியற் கற்கைகள்நிறுவகத்தின் பணிப்பாளர்பேராசிரியர் பாரதிகென்னடி, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் ரீ.திலீப்குமார்   உட்பட, பிரதேசசெயலாளர்கள், விளையாட்டு  உத்தியோகத்தர்கள், கலந்துகொண்டு போட்டியில்  வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள், நினைவுச் சின்னம்பணப் பரிசில்கள்என்பவற்றையும் வழங்கிவைத்தனர்.

இப்போட்டி நிகழ்வுகளில்16 பாடசாலை அணிகளும், மாவட்ட செயலகஅணியும், 9 பிரதேசசெயலக அணிகளும்பங்குபற்றியிருந்தன. பலத்த போட்டிக்குமத்தியில், பாடசாலைமாணவர்களுக்கிடையிலான போட்டியில்வந்தாறுமுலை மத்தியமகா வித்தியாலயம்முதலாம் இடத்தையும், வவுணதீவு பரமேஸ்வராவித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், பண்டாரியாவெளிநாமகள் வித்தியாலயம்மூன்றாமிடத்தையும் சிசிலியாபெண்கள் கல்லூரிநான்காமிடத்தையும் தக்கவைத்துக்கொண்டன.

இதேவேளை, மாவட்ட  செயலகம் பிரதேசசெயலகங்கள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் மண்முனைவடக்கு பிரதேசசெயலக அணியினர்முதலாம் இடத்தையும், வவுணதீவு பிரதேச  செயலக அணியினர் இரண்டாம் இடத்தையும்மாவட்ட செயலக அணியினர் மூன்றாம் இடத்தையும், வாகரைபிரதேச செயலக அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர்.