இலங்கையில் இந்தியர்கள் செய்யும் மோசமான செயல்

சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்குள் உள்நுழைந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் சிற்ப தொழில் மற்றும் நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி மதப்பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மதப்பிரசாரங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் கடந்த 8 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சிற்ப தொழிலில் ஈடுபட்டிருந்த 8 இந்தியர்களும், விருந்தகத்தில் பணிப்புரிந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் வழியாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24