நிர்வாணமாக மோட்டார்வண்டியில் பயணித்த இளைஞன்

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார்வண்டியில் பயணித்த இளைஞன் கடுகன்னாவ காவல்துறையினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கண்டி-கொழும்பு வீதியில் மோட்டார்வண்டியில் பயணித்த  நபரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணித்து பிடிக்க முற்பட்ட போதிலும் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடுகன்னாவ மற்றும் பேராதனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து வீதித் தடைகளைப் பயன்படுத்தி மோட்டார்வண்டியை நிறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இன்று திங்கட்கிழமை   நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.