மாதவிடாய் தவறியதால் சிக்கிய மாணவி

பதுளை – பிபிலையில் 9 ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனை  கைது செய்வதற்கான விசாரணைகளை  பிபில பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர்.

அந்தப் மாணவி டிக்டாக் செயலி மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

தாத்தாவின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, தனியாக இருக்கும் பாட்டிக்கு உதவியாகச் சென்றுள்ளார். 27/11/2024 அன்று, பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த இளைஞன் வீட்டிற்கு வந்துள்ளார், மேலும் அவர்கள் இருவரும் தவறான செயலில் ஈடுபட்டதுடன் தொடர்ந்தும் பலமுறை இவ்வாறான செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜனவரி 2025  மாணவிக்கு மாதவிடாய் தவறியதால், அவரது தாய் அவளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், இதன் போது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனைக்கமைய மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் சிறுமி பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள அவரது சகோதரி தங்கியிருந்த ஒரு தங்கும் விடுதிக்கு அனுப்பப்பட்டு,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.