
கேரளா கஞ்சாவுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!
தாளையடி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் இன்று லியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் நபர் ஒருவர் தாளையடி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்
விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து 5.660 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது
கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
