
புதிய அலை கலை வட்டத்தின் கலாமித்திரா விருதுவிழா!
44 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட புதிய அலை கலை வட்டம் கடந்த வியாழக்கிழமை 45ஆவது அகவைக்குள் கால் பதித்தது.
அன்றைய நாளில் மகளிர் அணி ஒன்றையும் அங்குரார்பணம் செய்து வைத்துடன் அந்த அமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை mகலாமித்திரா விருது விழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
இந் நிகழ்வு கொழும்பு-11 செட்டியார்தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக புரவலர் புத்தகப் பூங்கா மற்றும் ஹாசிம் உமர் அறக்கட்டளையின் நிறுவனர் ஹாசிம் உமர் கலந்து கொண்டார்.
புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினில் ஊடகத்துறையை சார்ந்த பெண்கள் பத்துபேர் கலாமித்திரா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டனர் .