மட்டக்களப்பில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

மட்டக்களப்பில் வர்த்தகரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினருமான அழகையா தேவகுமாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வந்தாறுமூலை மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த கற்றல் உபகரணங்கள் அழகையா தேவகுமாரின் சொந்த நிதியில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்