காணாமல் போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன் (வயது – 53) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு மோதி விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்பதுடன் படகில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வாறு படகில் பயணித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மீன்பிடியில் ஈடுபட்ட படகோட்டி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்