சம்மாந்துறை தாறுல் ஹஸனாத் பழைய மாணவர்களினால் துஆ பிராத்தனையும்,நினைவேந்தல் நிகழ்வு

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை தாறுல் ஹஸனாத் பழைய மாணவர்கள் ஒன்றியமும், அவரின் குடும்பத்தாரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தாறுல் ஹஸனாத் கலாபீடத்தில் அதிபர் அல் ஹாபிழ் யு.எல்.எம்.சலாஹுதீன் தலைமையில் சம்மாந்துறை தாறுல் ஹஸனாத் கலாபீடத்தில் துஆ பிரார்த்தனையும் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.

1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சம்மாந்துறை தாறுல் ஹஸனாத் மனன கலாபீடமானது பல நூறு ஹாபிழ்களை உருவாக்கியுள்ளதுடன் இதில் இருந்து வெளியாகிய அனைத்து ஹாபிழ்களும் இலங்கையில் பல பாகங்களிலும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கலாபீடத்தின் பழைய மாணவர்கள் ஒன்றியம் மற்றும் மர்ஹும் அல்ஹாபிழ் ஐ. எல். காதர் மீரான் சாஹிப் இன் குடும்பத்தினர் இணைந்து இக் கலாபீடத்தின் இரண்டாவது ஹாபிழ், எழுத்தாளர், ஆசிரியர், சமாதான நீதவான், பன்முக ஆளுமை, பழைய மாணவர் (மர்ஹும்) மௌலவி அல் ஹாஜ் அல்ஹாபில் ஐ. எல். காதர் மீரான் சாஹிப் சேவையை நினைவு கூரும் வகையில் துஆ பிராத்தனையும் நினைவேந்தல் நிகழ்வையும் கலாபீடத்தில் நடாத்திய இருந்தனர்.

இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர், உலமா சபை தலைவர் பஷீர் (மதனி) , தப்லீக்குல் இஸ்லாம் கலாபீடத்தின் அதிபர் இஸ்மா லெவ்வை (தப்லீகி) ,பழைய மாணவர்கள் , பொத்துவில் சபீஉல் ரஸ்ஷாத் கலாபீடத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், தாருல் ஹஸனாத் கலாபீடத்தின் ஹாபிழ்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள், அன்னாரின் குடும்பத்தினர்கள், அன்னாரின் நெருங்கிய நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்