அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகள் மீது நடவடிக்கை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தார்கள்.

இதன்போது திருகோணமலை நகரில் அரிசி விலையை அதிகரித்து விற்பனை செய்த இரு கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரு கடையில் சிவப்பு அரிசி 280 ரூபாவாகவும் மற்றைய கடையில் வெள்ளை பச்சை அரிசி 270 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்திய பின்பு இரு கடைகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்