
வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வேக துப்பாக்கிகள், பகல் மற்றும் இரவு வேளையில் பயணம் செய்யும் வாகனங்களினை கட்டுப்படுத்த இலங்கை போக்குவரத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
91 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்கத் தயாரிப்பான வேக துப்பாக்கி வேக வரம்பை மீறும் ஓட்டுநர்களைக் கண்டறிய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய இடங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் மேற்கு மாகாண போக்குவரத்து (தெற்கு) பிரிவு இயக்குநரிடம் 30 வேக துப்பாக்கிகள்கையளிக்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த வேக துப்பாக்கிகள் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேகக் கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்