சி.ஐ.டி யில் முன்னிலையாகும் யோஷித்த ராஜபக்ஷ!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.