முச்சக்கரவண்டியில் சாகசம் செய்த நால்வர் கைது! (வீடியோ இணைப்பு)
யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் செய்தமை மற்றும் இளைஞர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து இரண்டு முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டன.
கைதானவர்கள் அரியாலை மற்றும் பொம்மைவெளிஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினர் முச்சக்கரவண்டியில் சாகசம் செய்ததுடன் இளைஞர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியிருந்தனர்.
இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
இந்தநிலையில் குறித்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையின் போது அடையாளம் காணப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய எஞ்சியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.