பார்த்தீபன் தனது கடமைகளை கல்லடியில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார்
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்ட இலங்கை நிருவாக சேவை அதிகாரி எஸ். பார்த்தீபன் நேற்று புதன் கிழமை தனது கடமைகளை கல்லடியில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
2015 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்கான திறந்த போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவர் இந்நியமனத்தை பொறுப்பேற்க முன்னர் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக செயற்பட்டார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவி செயலாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.