முட்டை மற்றும் தேங்காயின் விலை சடுதியாக வீழ்ச்சி!

பண்டிகை காலத்தில் சந்தையில் முட்டையின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேநேரம், தேங்காயின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சந்தைகளில் தொடர்ந்தும் பச்சை அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

சில வர்த்தக நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குப் பச்சை அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்