மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளில் ஒருவரின் மருத்துவச் செலவுகளுக்கு நிதி அன்பளிப்பு
மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிலுள்ள மாற்றுதிறனாளி ஒருவரின் மருத்துவச் செலவுகளுக்காக 50000 ரூபா நிதி பசுமை இல்லத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிதி உதவியை சுவிஸ் நாட்டிலுள்ள பெண்கள் அமைப்பினர் வழங்கி வைத்துள்ளனர்.
இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர், சமூக சேவை உத்தியோகஸ்த்தர், மற்றும் பசுமை இல்லம், கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்