சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியின் பெயரை முன்மொழிய முடிவு!

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியின் பெயரை முன்மொழியவுள்ளதாக,  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பண்டார,  எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும், என தெரிவித்தார்.