
அம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி
அம்பலாங்கொட ஊராவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிர் இழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
