நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்கக் கோரிக்கை

நாட்டரிசி கிலோவொன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அரிசி விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டரிசி கிலோவொன்று தற்போது 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்