
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மன்னார் மறை மாவட்ட ஆயருடன் சந்திப்பு
-யாழ் நிருபர்-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கும், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதன்போது ஆயருடன் கலந்துரையாடி, அவரது ஆசியையும் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது தற்கால அரசியல் களநிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

