அரிசியின் விலையில் மாற்றம் ஏற்படாது
அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் ஏற்படாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு அதிக பலன்களை வழங்கும், ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்குவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்திற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
அரிசி ஆலைகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை , இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, மக்களின் பிரதான உணவான அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நுகர்வோர் பொருட்களின் தற்போதைய விலைகள் குறித்து பங்குபற்றியவர்கள் கவனம் செலுத்தினர்.