மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் எமது அணியில் இல்லை !

மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள் எவரும் தமது அணியில் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு என்ற பெயரில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஈஸ்வரபாதம் சரவணபவன் இன்று  திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தினை பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வெளியிட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்